எங்கிருந்து தொடங்கும்
ஒரு
மாற்றம்…
ஏன்,
ஒரு மாற்றத்திற்கான
முதல் வாக்கு
நம்முடையதாய் இருக்கட்டுமே…
அது
“விவசாயி”சின்னத்தில்
பதிவாகட்டும்.
பல்லடம் மணி.
13.
03.
21.
சேவைகளுக்கு மட்டுமே தேவைப்பட்ட அரசியல்;
சிலகாலம்..,
அதிகார சுகத்திற்கு
தேடப்பட்ட அரசியல்; சிலகாலம்.,
பதவிநமைச்சலுக்கு
தேடிக்கொண்ட அரசியல்; சிலகாலம்.,
மீசை வரைந்த வீரத்தமிழர்கள்
மயக்கிய அரசியல்;சிலகாலம்.,
சம்பாதிக்க மட்டுமே
காசுக்காய் சோரம் போகும்
வேசித்தன அரசியல்;நிகழ்காலம்.
ஓட்டுக்காய் நம் முன்
மண்டியிட்டவர்களின் முன்
இதோ இன்றுவரை நாம்
மண்டியிட்டு நிற்கின்றோம்..
1967 ல் நாம்
அறிவற்றவரானோம்.,
2020 ல் நாம்
அடிமைகளானோம்.,
இனிமேல் நாம்
கொத்தடிமைகளாவோம்…!!
காசுக்கு ஓட்டை விற்றுவிட்டு,
ஆட்சிக்கு வந்தவர்களை
“சில்லரை” என்பது
என்ன நியாயம்???!!!
“மாற்றம்”என்பது,
நம் கையில் இருந்தும்,
மாறும் என்பதில்
நம்பிக்கை இல்லை…
என்ன செய்ய??
இனியும்..,
வௌவாலுக்கே
வாழ்க்கைப்பட்டு,
வாய் வழியாய் தின்று
வாய் வழியே
மலம் கழிப்போம்..
வேறென்ன செய்ய????!!
மன்றாடி கேட்கின்றேன்,
இந்தமுறை
முடிந்தால்,
ஒரே ஒருமுறை
“விவசாயி”சின்னத்திற்கு
வாக்களித்து பாருங்களேன்..
பல்லடம் மணி.
]]>